தேசியப் பங்குச்சந்தை நிப்டி 426 புள்ளிகள் சரிந்தது…

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கி இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப் படுத்திய பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.

கடந்த ஒரு வாரமாக பங்குச்சந்தையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி காணப்பட்டது.

இந்நிலையில் இன்றைய வணிக நேரத் தொடக்கத்திலேயே பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது.

ஒன்பதரை மணியளவில் மும்பை பங்குச் சந்தை பங்கு விலை குறியீடு சென்செக்ஸ் 1549 புள்ளிகள் சரிந்து 32 ஆயிரத்து 175 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை பங்கு விலை குறியீடு நிப்டி 426 புள்ளிகள் சரிந்து 9434 ஆக இருந்தது.

வாகன உற்பத்தி நிறுவனங்கள், உலோக தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு விலை 9 விழுக்காடு வரை வீழ்ச்சி அடைந்தது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே