மீண்டும் நடிப்பில் களமிறங்கும் நதியா

பாசில் இயக்கிய ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நதியா அதன்பின்னர் ’மந்திரப்புன்னகை’ ’உயிரே உனக்காக’ ’நிலவே மலரே’ ’அன்புள்ள அப்பா’ ’ராஜாதி ராஜா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நதியா கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதனையடுத்து சில காலம் நடிப்புக்கு ஓய்வு விட்ட நதியா அதன் பின்னர் மீண்டும் எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி என்ற திரைப் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதன்பின்னர் ’தாமிரபரணி’ ’சண்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே திரிஷ்யம் படத்தில் நடித்திருந்த கீதா பிரபாகர் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் தான் இந்த படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷ்ய்ம் 2’ படத்திற்காக படப்பிடிப்புக்கு வந்த நதியாவுக்கு மேக்கப் போடும் காட்சிகளின் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் என்பதும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே