தேவர் சிலை அகற்றுவது தொடர்பாக காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் மோதல்..!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அனுமதியின்றி புதிதாக வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மோதலில் போலீசார், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வெள்ளாப்பட்டி புதூர் மந்தைதிடல் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக அப்பகுதி மக்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு சிலர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கற்கள், கம்புகள், மற்றும் மிளகாய்பொடி கொண்டு சிலர் திடீர் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதில் காவல் ஆய்வாளர் சார்லஸ், இரண்டு சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மூன்று காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.பி. சுஜித்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே