நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை – நடிகர் மாதவன்

மசாலா பாடல்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், நல்ல கதைகளுக்கு கிடைப்பதில்லை என நடிகர் மாதவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாதவன் பங்கேற்றார்.

அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மாதவன், தேர்வில் மாணவர்கள் ஒரு முறை தோற்றாலும் மறு முறை முயற்சித்து முன்னோக்கி சென்றால் அதனை எளிதாக வென்று விடலாம் என அறிவுரை வழங்கினார்.

இறுதிச்சுற்று போன்ற நல்ல படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்பதால் அந்த படத்தை திரைக்கு கொண்டுவர இரண்டு வருடம் காத்திருந்ததாக நடிகர் மாதவன் தெரிவித்தார்.

புதுவித கதைகள் கொண்ட படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் அதிக படங்களில் நடிப்பதற்கு தாம் ஒத்துகொள்ளவில்லை என்றும் நடிகர் மாதவன் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே