முகேஷ் அம்பானி வீடு அருகே மர்மக் கார் – சச்சின் வாஸ் கைது..!!

மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லம் அருகே, வெடிபொருட்களுடன் சிக்கிய மர்மக் கார் தொடர்பான வழக்கில், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாசேயை தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

காரின் உரிமையாளரான மன்சுக் ஹிரேன் கொலை செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ நேற்று உறுதி செய்தது.

இந்நிலையில் 12 மணி நேரம் காவல் அதிகாரி சச்சினிடம் நடைபெற்ற விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகேஷ் அம்பானி இல்லம் அருகே காரை நிறுத்தியதில் அவருக்குத் தொடர்பு இருந்ததாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே திகார் சிறையில் அக்தர் என்ற இந்திய முஜாயிதீன் தீவிரவாதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் காரை நிறுத்த தமது செல்போனில் தீவிரவாதக் குழுவுடன் பேசியதாக கூறப்படுகிறது.

அவரிடமிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு அவரிடமும் திகார் சிறைக்குள் 4 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே