பிரதமர் மோடியால் பாராட்டப் பெற்ற மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகன் குடும்பத்துடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்காக வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து உதவியதால் மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகனை பிரதமர் பாராட்டினார்.
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் சலூன் கடைகாரர் மோகன், அவரது மனைவி பாண்டீஸ்வரி இருவரும் மதுரை பாண்டி கோவில் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக வின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் இணைந்தனர்.