குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு செல்வி இராமஜெயம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

”பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது. பத்மநாபபுரம் தொகுதியில் ஜான் தங்கம் போட்டியிடுவார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம் போட்டியிடுவார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளராக இராம. பழனிசாமி அறிவிக்கப்பட்டு இருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே