மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்முறையாக திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த தொகுதியில், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் சார்பில் மயூரா போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே