கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வாளையார் மனோஜ்-க்கு நிபந்தனை ஜாமின்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறையிலுள்ள வாளையார் மனோஜுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு பேர் உத்தரவாத ஆவணங்களை நீதிமன்றத்தில் ஆஜராகி தாக்கல் செய்ததால் ஜாமின் வழங்கப்பட்டது. இரண்டு பேர் அளித்த உத்தரவாதத்தை ஏற்று மனோஜுக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

உதகையை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது, வாரம்தோறும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே