பா.ஜ.க-வில் இணைந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவி சென்னையில் கைது..!!

சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த பிரபல ரவுடி ‘கல்வெட்டு ரவி’ கைது செய்யப்பட்டார்.

கல்வெட்டு ரவி மீது 5 கொலை வழக்குகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கொலை வழக்கு ஒன்றில் ரவி ஆஜர் ஆகாத நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், கல்வெட்டு ரவி தலைமறைவாக இருந்தார்.

இவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் ஆந்திராவில் கல்வெட்டு ரவி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அங்கு பதுங்கியிருந்த ரவியை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே