JUST NOW : டெல்லி, ஜான்சி ராணி சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி ராணி ஜான்சி சாலையில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த 30 தீயணைப்பு வாகனங்கள் ஈடுப்பட்டுள்ளன.

இதுவரை சுமார் 50 பேரை மீட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீவிபத்தில் இருந்து வரும் புகையில் சிக்கி பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்த தீவிபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தீவிபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே