குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பிய 3 குழுக்கள் கண்டுபிடிப்பு…

தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பரப்பிவரும் மூன்று குழுக்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் அல்லது அதனை இணையதளத்தில் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்வது குற்றம் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு ஏடிஜிபி ரவி தகவல் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் எச்சரிக்கை செய்திருந்தார்.

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் மூன்று குழுக்கள் குழந்தைகளின் ஆபாசப்படங்களை சேமித்து வைத்து பரப்பி வருவது கண்டறியப்பட்டு இருப்பதாக ஏடிஜிபி ரவி தகவல் தெரிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில் பொதுமக்களின் செல்போன் மற்றும் இணைய பயன்பாட்டை கண்காணிக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போனில் பார்த்ததாக இளைஞரை ஒருவர் மிரட்டுவது போன்ற சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ போலியானது என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே