அன்னையர் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறிய OPS..!

உலகின் பொதுவான ஒரு விஷயம் என்றால் தாயின் அன்பு மட்டும்தான். பாலூட்டும் உயிரினம் தொடங்கி மனித உயிர்கள் அனைத்திற்கும் அன்னையே முதல் ஆதாரம்.

இப்படி வாழ்நாளை மற்றவர்களுக்காக அர்பணிக்கும் அவர்களுக்கு நன்றி கூறும் நாள்தான் அன்னையர் தினம். இன்று பலரும் அவரவர் அன்னையருக்கு நன்றி கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அரசியல் பிரமுகர்களும் தங்களின் தாயை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

துணை முதலமைச்சரான ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தாய்மையைப் போற்றியும், முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவை போற்றியும் அன்னையர் தின வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அன்னையர்களை தன்னலம் பாராது மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்துவோர் அன்னையர்தான் என பதிவிட்டுள்ளார்.

பின் ஜெயலலிதாவை மக்களால் நான் மக்களுக்காகவே நான் என தன்னலம் கருதாமல் தாயுள்ளத்தோடு மக்களுக்காக வாழ்க்கையை அர்பணித்த புரட்சித்தலைவி அம்மாவைப் போற்றி வணங்குகிறேன் என கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே