பிரதமர் மோடி நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு 17-ம் தேதியுடன் முடியும் நிலையில் பிரதமர் மோடி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,662-லிருந்து ஆக 62,939 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981- லிருந்து 2,109 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாடுமுழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது.

தற்போது பொது முடக்கமானது நடைமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை பிற்பகல் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே