அடுத்தவரின் நம்பிக்கையை இழிவுபடுத்துவது தவறு – தேமுதிக தலைவர் விஜயகாந்த்

அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு என கந்தசஷ்டி வாசிக்கும் விடியோவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்.

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த், கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த விடியோவை #தமிழ்க்கடவுள்முருகனுக்குஅரோகரா என்ற ஹேஸ்டாக்கில் விஜயகாந்த் பதிவிட்டார்.

அந்த பதிவில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம்.

இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்ததாகவும், ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு என தெரிவித்த நிலையில், அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு எனவும், எம்மதமும் சம்மதம் என அந்த பதிவில் அவர் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே