வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசாட்-30..

ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

நடப்பு ஆண்டில் இஸ்ரோ தனது முதல் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியிருக்கிறது.

3,357 கிலோ எடை கொண்ட ஜிசாட்30 செயற்கைக்கோள், தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து, அதிக எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏரியான்-5 ராக்கெட் மூலம், இன்று அதிகாலை 2.35 மணிக்கு ஏவப்பட்டது.

கவுன்டவுன் கரைந்துகொண்டு வந்து, பூஜ்ஜியத்தை தொட்டு, அதிகரிக்கத் தொடங்கியபோது, ஜிசாட்-30 செயற்க்கைகோளை சுமந்தபடி, ஏரியான்-5 ராக்கெட் விண்ணில் தாவி ஏறியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று அதிகாலை திட்டமிட்டபடி விண்ணிற்கு அனுப்பப்பட்டு புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

சரியான பாதையில் சென்ற ஏரியான்-5 ராக்கெட், தாம் புறப்பட்ட 38ஆவது நிமிடத்தில், புவிசுற்றுவட்டப் பாதையின், திட்டமிட்ட இலக்கில், ஜிசாட்-30 செயற்கைக்கோள் விடுவித்து, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதனை இஸ்ரோ மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது.

செல்போன் சேவை, தொலைக்காட்சி ஒளிபரப்பு, டெலிபோர்ட் சேவைகள், டி.டி.ஹெச் சேவை, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு போன்ற பயன்பாட்டிற்கு இந்த செயற்கைக்கோள் உதவும்.

விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜிசாட்-30-ன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே