இந்திய குடியுரிமை திருத்த சட்டம் : இரயில்வேயின் ரூ.88 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களால் இந்திய ரயில்வேயின் ரூ.88 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நடைபெற்று போராட்டங்களில், வன்முறைகளும் நிகழ்ந்து வருகிறது.

இது குறித்து கவலை தெரிவிக்கும் மத்திய அரசு பொது நிறுவனங்களின் சொத்துகளை சேதப்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தை உள்ளடக்கிய கிழக்கு ரயில்வே கோட்டத்தில் 72 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல தென்கிழக்கு ரயில்வே கோட்டத்தில் 13 கோடி ரூபாய் அளவுக்கும், வடகிழக்கு ரயில்வே கோட்டத்தில் 3 கோடி ரூபாய் அளவுக்கும், போராட்டக்காரர்களால் ரயில்வே சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடைபெறும் அந்தந்த மாவட்டங்களுக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் அங்காடி கூறியிருந்தார்.

இது பொது மக்களின் வரிப்பணம் என்றும், ஒரு ரயில் பெட்டி தயாரிக்க ஒரு வருட காலமாவது எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே