இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பது ஏன்..? சரத் பவார் கேள்வி

குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யாதது ஏன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.  

மத்திய அரசாங்கமானது, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி நடைமுறைப்படுத்தியிருக்கின்றது.

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து ஆவணங்கள் இல்லாமல் அகதிகளாக வருகின்ற இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் போன்றோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் விதமாக இந்திய குடியுரிமை திருத்தமானது தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இஸ்லாமியர்களுக்கு இந்திய குடியுரிமை சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

இந்திய நாட்டின் எல்லை பிரதேசத்தில், சென்ற 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கும் முன்பாக வந்தவர்கள் இந்திய நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு தகுதியான நபர்களாக கருதப்படுகின்றார்கள் என்று இந்திய குடியுரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்காளம், தலைநகரான புது டெல்லி, பிஹார் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலும், கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கின்றது.

இந்திய குடியுரிமை சட்டத்தை பற்றி கருத்து தெரிவித்து இருக்கின்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான, சரத் பவார் தான் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில்,  புதிய குடியுரிமை சட்டம் நாட்டின் ஒற்றுமை, அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். 

பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் மத்திய அரசு, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.  

நாட்டில் உள்ள மிக முக்கிய பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகவும் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்திய நாட்டின் சிறுபான்மையினர் மட்டுமல்லாமல் இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் விரும்புகின்ற, ஒற்றுமையை விரும்புகின்ற எந்த இந்திய குடிமகனும், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய திட்டங்களை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் தெரிவித்து இருக்கின்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே