இந்தியா Vs வங்கதேசம் 2வது டி-20 : இந்தியா அபார வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது.

ராஜ்கோட்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய வங்கதேச வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக சஹால் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 154 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய வீரர்கள் ரோகித் மற்றும் தவான் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக ரோகித் வங்கதேச பந்துவீச்சை சிதறடித்து 85 ரன்கள் விளாசினார்.

இறுதியில் இந்திய அணி 15 புள்ளி 4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் டி – 20 தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே