கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக மீட்பு பணி தாமதமாகி வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தி்ல், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் அதி கனமழையால், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
தொழிலாளர் குடியிருப்பு முகாமில் தங்கியிருந்த 80-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கேரள காவல்துறை, தீயணைப்புத்துறை, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் என பல்வேறு தரப்பினரும் 4ம் நாளாக தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்றைய நிலவரப்படி உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆக அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் இன்று பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தேடப்பட்டு வந்த ஆறு மாத குழந்தையின் உடல் நிலச்சரிவு இடிபாடுகளில் இருந்து இன்று மீட்கப்பட்டது.