மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் ஆளுநர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.