நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து – முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது – மோடி

நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து இஸ்லாமியர் என்று பேதம் பார்க்கக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பார்லி தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசும்போது காஷ்மீரில் இந்துக்கள் அதிகம் இருந்து இருந்தால், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துருப்பீர்களா?? என்ற கேள்வி எழுப்பியதாக தெரிவித்த மோடி, நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து-இஸ்லாமியர் என்று பேதம் பார்க்கக்கூடாது என்றும், இதுபோன்ற செயல்களில் பாஜக அரசு என்றும் ஈடுபடாது எனவும் கூறினார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் நாடு அழிந்து போகும் என காங்கிரசை சேர்ந்த ஒருவர் தெரிவித்திருந்தார் எனக்கூறிய மோடி, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் எதுவும் நடக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

யாரேனும் காஷ்மீருக்கு செல்ல விரும்பினால் நானே ஏற்பாடு செய்து தருகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏளனமாக பேசியவர்களை வரலாறு குறித்துக் கொள்ளும் எனவும் தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது மோடி பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே