குடிபோதையில் சிங்கத்தை நேருக்கு நேராக பார்த்து முறைத்த இளைஞர்

டெல்லி உயிரியல் பூங்காவில் மதுபோதையில் சிங்கத்திடம் நேருக்கு நேர் நின்ற ஒருவரால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டெல்லி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை வழக்கம் போல மக்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிங்கங்கள் நடமாடும் பகுதியில் பிரமாண்ட சுவர் மற்றும் இரும்பு வேலிகளைத் தாண்டி இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.

சுற்றிருப்பவர்கள் அதனை பார்த்து அச்சத்தில் அலற, அது குறித்தெல்லாம் கவலைப்படாத இளைஞர் நேராக சிங்கத்தின் அருகில் சென்றார்.

சில அடி கூட இடைவெளி இல்லாத அளவிற்கு அருகே அமர்ந்து சிங்கத்தின் முகத்தை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருக்க, சிங்கமும் அமைதியாக இருந்தது.

தரையில் அமர்ந்து சிங்கத்தின் முகத்தைத் தடவிக் கொடுத்தும், அதனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த இளைஞரின் செயல் காண்போரை அச்சத்தில் தாழ்த்தியது.

சில நொடிகள் அமைதியாக இருந்த சிங்கம், பின் அந்த இளைஞரைத் தாக்க சென்றது.

அப்போது மயக்க ஊசியை சிங்கத்தின் உடலில் செலுத்தி இளைஞரை உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே