வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக பெருங்களூர், வல்லத்தில் 13 சென்டி மீட்டர் மழையும், கீழ்பென்னாத்தூரில் 11 சென்டி மீட்டர் மழையும்; தஞ்சாவூரில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே