தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதேபோல் தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

நவம்பர் 15 ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் விடாமல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனால் ஆங்காங்கே சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே