“வணிகத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர்” – டிடிவி தினகரன் இரங்கல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.

கொரோனாவை எதிர்த்து போரிடும் முன்கள வீரர்களான, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள் என பல தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.

மேலும் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் என பாகுபாடின்றி அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி வசந்த குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் கடந்த 11-ம் தேதி முதல் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் இன்று மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும், செயற்கை சுவாசத்துடன் திவீர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

இந்நிலையில் இன்று மாலை வசந்த்குமார் காலமானார். மாலை 6.56 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவனை தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 70.

இன்று இரவே அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அவரது இறப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே