பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 112வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை இன்று நடைபெற இருக்கிறது.

இதனையொட்டி சுமார் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறந்த ஆன்மீகவாதியாகவும், நாடாளுமன்றவாதியாகவும் திகழ்ந்த முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி குருபூஜை அவரது சொந்த ஊரான பசும்பொன்னில் நடைபெற உள்ளது.

அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், மாநில அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனையொட்டி, தென் மண்டல காவல் துறை ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 7 டி.ஐ.ஜி.க்கள், 22 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

95 சிசிடிவி கேமராக்கள், 2 ஆளில்லா விமானங்கள், குற்றவாளிகளை கண்டறியும் FACE TRACKER முறை என அதி நவீன தொழில் நுட்பங்களையும் காவல்துறையினர் பயன்படுத்துகின்றனர்.

மதுரை கோரிப்பாளையம், சென்னை நந்தனம் பகுதிகளில் உள்ள தேவர் சிலைக்கும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே