#GreenIndiaChallenge : மரக்கன்று நட்டு ட்விட்டரில் பதிவிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்!

தெலுங்கு உலகின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு விடுத்த #GreenIndiaChallenge-ஐ ஏற்று மரக்கன்று நட்டு ட்விட்டரில் பதிவிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்!

தெலுங்கில் முன்னணி ஹீரோவான நடிகர் மகேஷ்பாபு கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிறந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி அவரது 45 வது பிறந்தநாள். கொரோனா சூழலால் ரசிகர்களை தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டவர், பிறந்தநாள் அன்று வீட்டில் செடி நட்டு எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்கமுடியாது என்று பதிவிட்டதோடு #greenindiachallange சவாலை நடிகர் விஜய், என்.டி.ஆர், நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் சேலஞ்ச் செய்தார்.

அதனையொட்டி, நேற்று மாலை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் இது உங்களுக்குத்தான் மகேஷ்பாபு. பசுமையான இந்தியாதான் ஆரோக்கியமானது.

எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சவாலை ஏற்றுக்கொண்டு விஜய் பதிவிட்டவுடன் அடுத்த 25 நிமிடத்தில் சவாலை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி சகோதரர். பாதுகாப்பாக இருங்கள் என்று பதில் ட்விட் போட்டுள்ளார், நடிகர் மகேஷ்பாபு.

இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபு விடுத்த #GreenIndiaChallenge-ஐ ஏற்று மரக்கன்று நட்டு ட்விட்டரில் பதிவிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்!

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே