முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் காலமானார்!

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதியரசர் மோகன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்.

1954ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கிய எஸ்.மோகன், சென்னை உயர்நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். 

மேலும் கர்நாடக மாநில பொறுப்பு ஆளுநராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

நீதியரசர் மோகனின் இறுதிச்சடங்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

நீதியரசர் மோகனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே