சாத்தான்குளம் வழக்கு – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை மிரட்டி, கலைக்க வாய்ப்புள்ளதால் வழக்கின் விசாரணையை முடிக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, காவல்துறையினரின் விசாரணையின் போது மரணமடைந்த ஜெயராஜின் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்‍.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே