புதுச்சேரி மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் உயிரிழப்பு..!!

புதுச்சேரியில் கறுப்புப் பூஞ்சை நோய்க்கு பெண் ஒருவர் பலியானார்.

புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவரது மனைவி எழிலரசி(62). இவருக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியபட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை எழிலரசி உயிரிழந்தார். கறுப்புப் பூஞ்சை நோயால் புதுச்சேரியில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே