வட மாநிலங்களில், திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இந்தியா, நேபாள எல்லையை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில், 1.3 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5-ஆக பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். லேசான நில அதிர்வு என்பதால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.