விவசாயிகள் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் – மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்..!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியான உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர்.

அவர்களை டெல்லி எல்லையில் அரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர்.

நிலைமை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், டிராக்டர்களிலும், லாரிகளிலும், நடைபயணமாகவும் விவசாயிகள் டெல்லி நோக்கிய தங்கள் பயணத்தை தொடங்கினர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறுகையில், விவசாய சங்கங்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பது தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. 

டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்புகிறேன்.

விவசாயிகளின் பெயரில் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் அரசியலில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே