கொரோனா தடுப்பு பணிகள்… பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!

பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 6ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் 3ம் கட்ட தளர்வுகளும் நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்த நிலையில், மாநிலங்களில் தற்போது உள்ள கொரோனா நோய்த்தொற்று நிலவரம் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும், இந்த மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தளர்வுகளை கட்டுப்படுத்துவதாக அல்லது வேறுசில தளர்வுகளை அனுமதிப்பதா? உள்ளிட்ட கருத்துக்கள் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே