மின்சாரக்கட்டணம் அதிகரிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுங் கட்சியின் மீது குற்றச்சாட்டு

கொரோனாவை விட மக்கள் மின் கட்டணத்தை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ மூலம் பேசியதாவது: தவறான அடிப்படையில் மின்கணக்கீடு எடுத்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

மின்கட்டண வசூலில் மின்வாரியத்திற்கு லாபம். ஆனால் சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய சுமை. சலுகை அளிக்காமல் கட்டணத்தை அதிகப்படுத்துவது ஏற்புடையது அல்ல.

கொரோனாவை விட மக்கள் மின் கட்டணத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர். நாட்டின் நிலைமை குறித்து, முதல்வருக்கும், அமைச்சருக்கும் சரிவர தெரியவில்லை. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்தவர்களுக்கு நான் மாதம் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். 

ஆனால், அதனை அவர்கள் கேட்கவில்லை. குறிப்பாக மின்கட்டணம். அதில் ஆரம்பத்தில் இருந்தே அதிக குளறுபடிகள் இருந்தன. சிலருடைய மின்கட்டண அட்டையில் மிக அதிகமான தொகை இருந்தது.

இது குறித்து பலரும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதற்கு இபிஎஸ் ஆட்சி தான் காரணம். ஆரம்பத்தில் இருந்தே கொரோனாவை சரிவர கையாளாத இபிஎஸ் ஆட்சி, முன்னுக்கு பின்னான உத்தரவுகளை பிறப்பித்தது.

அதன் பின்னர் ஏற்பட்ட விளைவுகளுக்கு, அவர்கள் மக்களை குற்றம்சாட்டினர்.

இந்த கட்டணம் அநியாயமான கட்டணம். இந்த மாதிரியான நெருக்கடியான காலகட்டத்தில், அரசு தங்களால் முடிந்த சலுகைகளை மக்களுக்கு செய்ய வேண்டும்.

ஆனால், இங்கு அதிகமாக மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேரளா, மஹாராஷ்டிரா, மாநில அரசுகள், மின்கட்டணத்தில் சலுகை வழங்கியுள்ளது.

ஆனால், தமிழக அரசால் அதை செய்ய இயலவில்லை. இதற்கு தமிழக மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? மனமில்லையா? இதற்கான காரணம் நிதி நிலைமை என்றால், அது குறித்து தெளிவான விவரங்கள் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே