மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள ஒரு விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால், அங்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ், கட்சிக்கும் பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
திரிணமுல் காங்கிரசில் இருந்து, மூத்த தலைவர்கள், மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருவது அதிகரித்து வருகிறது.
இன்றும் மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
இதனிடையே, அம்மாநிலத்தில் பாஜகவை பலப்படுத்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அண்மையில் மே.வங்கம் சென்று வந்தார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை மேற்கு வங்கம் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும் , அங்கு உள்ள பெலிஜூரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டிற்குச் சென்ற அவர் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்து வீட்டினரும் அவரை காண குவிந்தனர். இதனையடுத்து, அவர்களுடன் குழு போட்டோ எடுத்துக் கொண்டார் அமித் ஷா .
இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதலங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.