அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது வெளிநாட்டுப் பயணத்துக்காக வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்கு செல்லும் துணை முதலமைச்சர், நாளை சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறார்.

10-ஆம் தேதியன்று சர்வதேச சமுதாய ஆஸ்கார் 2019′ விழாவில், துணை முதல்வருக்கு விருது அளிக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து வாஷிங்டன் டிசி, ஹுஸ்டன், நியூயார்க் நகரங்களில் நடைபெறும பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், வரும் 17-ஆம் தேதி துணை முதலமைச்ர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்ப இருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் அவரை அதிமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே