ப. சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதேநேரத்தில் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, அமலாக்கத் துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி சுரேஷ்குமார் கைதுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை மனு குறித்து நவம்பர் 29ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதையடுத்து மனு மீதான விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே