நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்தம் செய்த டிடிஎஸ் வரிதொகையை முறையாக செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கிய ஊதியத்திற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தொகையை வருமான வரித்துறை குறித்த காலத்திற்குள் செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சரக்கு மற்றும் சேவை வரி துறை அதிகாரி விஷாலுக்கு சம்மன் அனுப்பினார்.

இந்த சம்மனை பெறாமல் இருந்ததாக விஷாலுக்கு எதிராக வழக்கு தொடர பெற்றது. அதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக நடிகர் விஷால் ஆஜராகினார்.

சரக்கு மற்றும் சேவை வரித்துறையினரின் சம்மனை வேண்டுமென்றே பெறவில்லையா அல்லது வேண்டுமென்றே ஆஜராகாமல் இருந்தீர்களா என விஷாலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பில் கூறப்படும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக அப்போது விஷால் தெரிவித்தார்.

விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதி நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே