வாடிக்கையாளர்களுக்கு சற்றே நிம்மதியான செய்தி… தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.5,380க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.83.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி சவரன் தங்கம் விலை 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதன்பிறகும் விலை உயர்ந்தபடி உள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.43,328க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராமிற்கு ரூ.42 உயர்ந்து ரூ.5,416க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வந்த தங்கத்தின் விலையில் இன்று சற்றே சரிவு சரிவு காணப்பட்டுள்ளது. தங்கம் வாங்குவோருக்கு சிறிது நிம்மதியான விஷயமாக தான் உள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே