எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

2019 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

2019 ஆம் ஆண்டிற்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான எரித்தியாவுடனான எல்லைப் பிரச்சனையை தீர்க்க, தீர்க்கமான முயற்சி மேற் கொண்டதாகவும், சுமூகமாக தீர்த்து வைத்ததற்காகவும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே