புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்படவேண்டும் – R.S.பாரதி

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்படவேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில், தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். வார்டுகள் வரையரை செய்யப்படாததைக் காரணம் காட்டி, தேர்தலை நடத்தாமல் இருக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே