கன்னியாகுமரி மாவட்டம், செட்டிகுளம் பகுதியில், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழக ராசியில் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், செட்டிகுளம் பகுதியில், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவரும் மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில், வழங்கப்படும் ரூ.5,000 தொகை, ரூ.7,500 ஆக கொடுக்கப்படும் என்றும், மீனவர்களுக்கு என்று தனி வங்கி அமைத்து, அதன்மூலம் மீனவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் பெற்று தொழில் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடலுக்கு செல்லும் மீனவர்கள் விபத்தில் உயிரிழந்து விட்டால், அவர்களுக்கு மீனவ செலவாளி நிதியில் இருந்து வழங்கப்படும் ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும்; வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் கன்னியாகுமரியில் அமைக்கப்பட மாட்டாது என வாக்குறுத்து அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே