பிரேசிலில் ஒரே நாளில் 3,600 பேர் உயிரிழப்பு… கொரோனாவால் இதுவரை 2.77 கோடி பேர் பலி; இந்தியாவிலும் மோசமாகும் நிலைமை!!

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.66- கோடியாக உயர்ந்துள்ளது.சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இன்னமும் கட்டுடங்காமல் பரவி வருகிறது.  தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனினும்,  2-வது, 3-வது அலைகளாக பரவும் கொரோனா கடுமையான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.66- கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 8 ஆயிரத்து 819-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரத்து 761- ஆக உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ஆம் இடத்திலும்  இந்தியா 3-ஆம் இடத்திலும் உள்ளன.

*அமெரிக்காவில் 73,790 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 1,216 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

*பிரேசிலில் உச்சபட்சமாக ஒரே நாளில் 82,558 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,600 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

*இந்தியாவில் இந்த ஆண்டின் உச்சமாக 62,291 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 292 பேர் உயிரிழந்தனர்.  

*இங்கிலாந்தில் 6,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 70 பேர் உயிரிழந்தனர்.

*41,869 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவுக்கு 363 பேர் உயிரிழந்துள்ளனர்.

*இத்தாலியில் புதிதாக 23,987 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 457 பேர் உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே