18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, நாமக்கல், கோவை, நீலகிரி பெரம்பலூர், கடலூர், சேலம், ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே