நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீதான ரூ.2.70 கோடி மதிப்பிலான நிலமோசடி புகாரை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக நடிகர் சூரிக்கு தரவேண்டிய 40 லட்சம் சம்பள பாக்கிக்கு பதிலாக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் ‘வீர தீர சூரன்’ படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த விஷ்ணு விஷால், “என் மீதும் என் தந்தை மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

‘கவரிமான் பரம்பரை’ என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை சூரி தான் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு திரும்பத் தர வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே