சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல்..!!

பெண் எஸ்பி.க்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் சிபிசிஐடி காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்டதன்படி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்ததையடுத்து வழக்கு விசாரணை 23 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தானாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து விசாரணையை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே