கொரோனா அச்சுறுத்தலால் CAA போராட்டம் ஒத்திவைப்பு..

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து ஷாஹின்பாக் போராட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில், கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய பேராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

தற்போது கொரேனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து ஷாஹின்பாக் போராட்டங்களையும் ஒத்திவைக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் 32 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் கைவிடப்படுவதாகவும் இஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே