இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் மீண்டும் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவியதை அடுத்து கடந்த19ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் மோடி.

அப்போது 22 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், மாலை 5 மணிக்கு கைதட்டி மருத்துவ மற்றும் பிற சேவைகளில் உள்ள ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்க கேட்டுக்கொண்டார்.

ஒட்டுமொத்த நாடும் அப்படியே பின்பற்றியது.

ஆனால் மறுநாள் முதல் மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினர். 

இவ்வாறு மக்கள் அரசு சொல்வதை கேட்காமல், நடந்து கொள்வது சரியல்ல என்று பிரதமர் மோடி நேற்று ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாட்டு மக்களிடம் மீண்டும் இன்று (24/03/2020) இரவு 08.00 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் நிலையில் பிரதமர் பேசுகிறார்.

அப்போது பல முக்கிய உத்தரவுகளை அல்லது வேண்டுகோள்களை அவர் முன்வைக்கக் கூடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே