Breaking News : நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் பெண்களுக்கு 51 நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நகர் மன்ற தலைவர் பதவிகளுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி கூடலூர் நகர்மன்ற தலைவர் பதவியிடம் பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, கடலூர் நகராட்சி பழங்குடி இன பெண்களுக்காக ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 9 நகராட்சிகள் பட்டியல் இன பெண்களுக்காகவும் மற்றும் நெல்லிக்குப்பம், அரக்கோணம், மறைமலைநகர் உள்ளிட்ட 8 நகராட்சிகள் பட்டியல் இனத்தவர்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தலைவர் பதவிகளுக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு அறிவித்து 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசிதழ் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

51 நகர்மன்ற தலைவர் பதவியிடங்கள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே